tamilnadu

img

நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் சரிவைக் கண்ட பங்குச் சந்தை.... சென்செக்ஸ், நிப்டி இரண்டுமே அடி வாங்கின

மும்பை:
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து உச்சம் கண்டு வந்தன.இந்நிலையில், வார வர்த்தகத்தின் நான்காவது நாளில், மும்பைப் பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் (sensex),  தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி(nifty) ஆகிய இரண்டுமே அடி வாங்கியுள்ளன.மும்பை பங்குச் சந்தையில், புதன்கிழமையன்று வர்த்தகம் 43 ஆயிரத்து 593.67 புள்ளிகளில் நிறைவடைந்தது இருந்தது. இது வியாழனன்று 43 ஆயிரத்து 357.19 புள்ளிகளுக்கு இறங்கியது. முந் தைய நாளைக் காட்டிலும், 236.48புள்ளிகள் சென்செக்ஸ் சரிவைச் சந்தித்தது.'

இதேபோல தேசிய பங்குச் சந்தையும் சரிவைச் சந்தித்தது. புதன்கிழமையன்று 12 ஆயிரத்து 749.15 புள்ளிகளில் நிலைபெற்ற தேசியப் பங்குச் சந்தை வர்த்தகம், வியாழக்கிழமையன்று 12 ஆயிரத்து 690.80 புள்ளிகளுக்கு இறங்கியது. 58.35 புள்ளிகள் சரிந்தது.கடந்த வாரத்தில் அந்நிய முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாகவே பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைக் கண்டு வந் தன. ஆனால், நான்காம் கட்ட நிதிஊக்கத் தொகையை அறிவிக்கப்போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த அறிக்கையானது, அமைச்சரின் அறிவிப்புகள் எந்த துறைக்குசாதக - பாதகமாக இருக்குமோ? என்ற அச்சத்தை முதலீட்டாளர் களுக்கு ஏற்படுத்தி விட்டது. இதுவே பங்குச் சந்தையில் தாக் கத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.